Friday, May 21, 2010

தண்ணீருக்குள் முணு முணுக்கும்
கூழாங்கற்களை விட
வெடித்து வெளியேறும் நீர் குமிழ்கள் மேல்.
இசங்கள்

குகைவாழ் மனிதனிடம் பௌத்தமும்

பெருசாளிகளியின் உணவாய் மார்சியமும்
பல்லிடுக்கில் தொங்கும்
சதை துணுக்குகளாய்
மனிதாபிமானமும்
ஊன் வடிய வழிகிறது.

இசங்கள் மானுடத்தின் மனிதாபிமான
தேடல்கள்.

உலக நிலம் உலக கொள்ளையர்களால் ஆளப்படுகிறது.

''உலக நிலம்
உலக மக்களால்
உழப்பட வேண்டும் '' - கண்புசியஸ் .